பெங்களூரு மற்றும் ஐதராபாத்திலிருந்து, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேறும் விவகாரம், பார்லிமென்டில் நேற்று புயலைக் கிளப்பியது. கட்சிப் பாகுபாடின்றி, இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், வதந்திகளை பரப்புவோர் மீது, தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.வடகிழக்கு மாநிலமான அசாமின், நான்கு மாவட்டங்களில், அம்மாநிலத்தின் போடோ பழங்குடியினருக்கும், வங்க தேசத்திலிருந்து குடி பெயர்ந்து ...